Aishwarya Rai Interview : பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டது ஏன் என ஐஸ்வர்யா ராய் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
எம்.ஜி ஆர் முதல் இன்று வரை பல இயக்குனர்கள் இயக்க ஆசைப்படும் கதை பொன்னியின் செல்வன். இதுவரை இந்த வாய்ப்பு யாருக்கும் கைக்கிட்டவில்லை. காரணம் இந்த கதையை இயக்க மிக பெரிய பட்ஜெட் தேவை என்பது தான்.
தளபதி 64-ல் விஜய்க்கு ஜோடி யார்? – வெளியான பக்கா மாஸ் தகவல்.!
மணிரத்தினம் தற்போது இந்த கதையை இயக்கியே தீருவேன் என முழு முனைப்புடன் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறார்.
அதற்காக விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி , அமிதாப் பச்சன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் என பல நடிகர் நடிகைகளுடன் பேசி அவர்களின் சம்மதத்தையும் வாங்கி விட்டார்.
தற்போது ஐஸ்வர்யா ராய் அளித்துள்ள பேட்டியில் பொன்னியின் செல்வன் என்ற கதையை படமாக்குவது பெருமைக்குரியது.
மணிரத்தினம் என்னை அணுகி கதையை கூறினார். என்னுடைய கதாப்பாத்திரமும் கதையும் பிடித்து போகவே நடிக்க ஒப்பு கொண்டேன். மணி சார் படம் என்பதாலும் மறுப்பு சொல்ல மனமில்லை எனவும் தெரிவித்த்துள்ளார்.