காதல் சர்ச்சையில் சிக்கியிருந்த ஐஸ்வர்யா லட்சுமி கொடுத்திருக்கும் விளக்கம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள போன்ற பல மொழிகளில் உள்ள படங்களில் நடித்துவரும் இவர் தற்போது கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த அர்ஜூன் தாஸூடன் காதலில் இருந்து வருவதாக புகைப்படத்துடன் தகவல் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வந்தது.

தற்போது இது குறித்து நடிகை ஐஸ்வர்ய லட்சுமி, நண்பர்களே என்னுடைய இந்த புகைப்படம் பெரிய விஷயமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, நாங்கள் இருவரும் சந்திக்க நேர்ந்தது அதனால் சாதாரணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டோம் அவ்வளவுதான். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் அர்ஜுன் தாஸ் என்றும் உங்களுடையவர் என்று பதிவின் மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.