விவாகரத்துக்கு பிறகு தனுஷ் பற்றி பெருமையாக பேசி உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகை தனுஷை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வருடம் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
விவாகரத்துக்கு பிறகு நடிகர் தனுஷ் பற்றி பேசியுள்ளார். அதாவது நிகழ்ச்சி ஒன்றில் அனிருத்தை அறிமுகப்படுத்தியது பற்றி கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “அதற்கு நான் காரணம் இல்லை முழுக்க முழுக்க தனுஷ் தான். அனிருத்தின் திறமையை தனுஷ் தான் கண்டுபிடித்தார்.
மேலும் அனிருத்தின் பெற்றோர்கள் அவரை படிக்க வெளிநாட்டிற்கு அனுப்ப முடிவெடுத்தபோது, அவர்களிடம் பேசி மனம் மாற்றினார்.
பிறகு அனிருத்திற்கு கீபோர்டு வாங்கி கொடுத்தார். 3 படத்தில் அனிருத்தை இசையமைப்பாளராக போட வேண்டும் என என்னிடம் கூறினார். இன்று அனிருத்தின் வளர்ச்சியை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தெரிவித்துள்ளார்.
அனிருத் பல மேடைகளில் தனுஷ் இல்லையென்றால் நான் இல்லை என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.