மாணவர்கள் சந்திப்பில் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ் குறித்து தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். லியோ படத்தில் நடித்து வரும் இவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் மூலமாக அரசியலில் களமிறங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதற்கேற்றார் போல தளபதி விஜய்யின் அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு தொடங்கியுள்ளார். அதற்கு முதல் அடித்தளமாக நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்தலில் அதிக மதிப்பெண் பெற்ற 6000 மாணவ மாணவிகளை விஜய் என்று சென்னை நீலாங்கரை பகுதியில் நேரில் சந்தித்து மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மாணவர்களுக்கு அட்வைஸ் ஒன்றையும் கொடுத்துள்ளார். அதாவது படிப்பை தாண்டி பார்த்தால் குணமும் சிந்தனை திறனும் தான் எஞ்சியிருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஒருவன் வாழ்க்கையில் பணத்தை இழக்கலாம் ஆனால் குணத்தை இழக்க கூடாது என பேசிய அவர் பெற்றோர் கண்காணிப்பில் இருந்து வெளியே செல்லும்போது கிடைக்கும் சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
இன்றைய கால மாணவ மாணவிகளுக்கு நிச்சயம் தேவையான ஒரு அட்வைஸ் தான் என்று ரசிகர்கள் பலரும் இதை பாராட்டி வருகின்றனர்.