MK Stalin DMK : கருணாநிதியின் 100- வது நாளின் நினைவு தினத்தையொட்டி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் எழுதி இருப்பவை, “தலைவர் கருணாநிதி குறித்து, நொடிக்கு நூறுமுறையாவது நினைக்காமல் இருப்பதில்லை.
அவர் நம்மிடம் இல்லாமல் இருப்பினும், நம் நினைவில் என்றும் இருக்கிறார். கருணாநிதி, பல ஜனாதிபதி, பிரதமர்கள் தேர்ந்தெடுத்தார்.
அவர் வகுத்து தந்த வழிமுறைகள், இன்றைய காலகட்டத்தில் பலவற்றிர்க்கு அவசியமாக உள்ளது.
மேலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளும் மதவெறி சக்திகளிடம் இருந்து, இந்தியாவை பாதுகாக்க, வலுவான மத சார்பற்ற அணியை உருவாக்கும் நோக்கில், என்னை சந்தித்து பேசினார். அவரது முயற்சிக்கு திமுக துணை நிற்க்கும்.
நாட்டின் எதிர்காலம் காக்கும் சமிக்சைகள் வெளிப்பட ஆரம்பித்துவிட்டன. அவ்வகையில், நவம்பர் 8 அன்று பெரம்பலூர், குன்னம் நகரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும் அதிமுக, பாஜக கட்சிகளை ஜனநாயக முறையில் வீழ்த்துவது தான் நம் ஒரே இலக்கு. இதற்காக கருணாநிதி நினைவை போற்றும் 100 நாளில் நெஞ்சுயற்தி சூளுரைப்போம்..” இவ்வாறு கடிதத்தில் கூறி இருக்கிறார்.