ரசிகர்களுக்கு ஸ்ருதிஹாசன் வைக்க வேண்டுகோள்.. என்ன விஷயம் தெரியுமா?

ரசிகர்களுக்கு ஸ்ருதிஹாசன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கும் நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார்.
அதாவது தனது ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்து விட்டனர் என்றும் அதில் போடும் போஸ்ட் நான் போடுவது அல்ல அதனால் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
