நடிகை சமந்தா வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஏராளமான டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இரண்டு மொழிகளிலும் எக்கச்சக்கமான ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் யசோதா திரைப்படத்தின் பிரமோஷன் போது நடந்த நேர்காணலில் தனக்கு மயோசிட்டிஸ் என்னும் நோயின் பாதிப்பு இருப்பதாக தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சி படுத்தினார். அதன் பிறகு அதற்காக தீவிரமான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்த சமந்தா தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல குணமடைந்து வருவதாக கூறி மீண்டும் பழையபடி உத்வேகமாக படப்பிடிப்புகளில் தீவிரம் காட்டி வந்திருந்தார்.

அந்த வகையில் தற்போது குஷி மற்றும் சிட்டாடல் வெப் தொடர் போன்ற படப்பிடிப்புகளை நிறைவு செய்திருக்கும் சமந்தா தற்போது தோழிகளுடன் சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கிருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது பதிவிட்டு வரும் அவர் தற்போது குரங்குடன் செல்ஃபி எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அதனை கண்ட ரசிகர்கள் அந்தக் குரங்கை அதிர்ஷ்டசாலி என்று குறிப்பிட்டு கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.