3 ஆண்டுகளாக தொல்லை செய்யும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை..

தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர் ரவீணா ரவி. இவர், நடிகைகள் சமந்தா, எமி ஜாக்​சன், காஜல் அகர்​வால் உள்பட பல கதா​நாயகி​களுக்கு தமிழ், மலை​யாளப் படங்​களில் டப்பிங் குரல் கொடுத்து வருகிறார். மேலும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் நடிகை​யாக அறி​முக​மான இவர், தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலை​யில், 3 ஆண்​டு​களாகத் தொல்லை அளித்​து​வரும் நபர்களிடம் இருந்து தன்​னை​யும் தனது நண்​பர்​கள், குடும்பத்தினரை​யும் பாது​காக்​கக் கோரி அவர் இன்​ஸ்​டா​வில் வெளி​யிட்​டுள்ள பதிவு பரபரப்பை ஏற்​படுத்​தி ​உள்​ளது.

இதுபற்றி அவர் தெரிவிக்கையில், ‘தொடர்ந்து 3 ஆண்​டு​களாகத் தொல்லை அளித்து ​வரும் நபர்களிடம் இருந்து என்​னை​யும் எனது குடும்​பத்​தினரை​யும் பாது​காக்​கவே இதைப் பதி​விடு​கிறேன். போலீஸில் அளித்த புகார்​கள், எச்சரிக்கைகள் இதை நிறுத்​தி​விடும் என்ற நம்பிக்​கை​யில் அமைதியாக இருந்தேன்.

ஆனால், சபரீஷ் என்பவரும் அவரது இரட்டை சகோ​தரரும் என்னை​யும் என் குடும்​பத்​தினரை​யும் நண்பர்​களை​யும் தொடர்ந்து அவதூறாக​வும் ஆபாச​மாக​வும் பேசி வருகிறார்கள். அருவருப்​பான வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை மட்டுமல்லாமல், எனக்கு நெருங்​கிய​வர்​களை​யும் இலக்​காக்கி குறுஞ்​ செய்​தி​களை அனுப்பி வரு​கிறார்​கள்.

என்​னால் இந்​தத் தொல்​லைகளைச் சந்திக்க நேர்ந்த நண்பர்​கள் மற்​றும் குடும்​பத்​தினரிடம் மன்னிப்​புக் கேட்​டுக்​ கொள்​கிறேன். நாங்​கள் சட்​டப்​பூர்வ வழிகளை மேற்​கொண்​டோம். ஆனால், தொல்​லைகள் நிற்​க​வில்​லை. அவர் பல வலை​தளக் கணக்குகளைத் தொடங்கி அதன் மூலம் என்​னை​யும் பல நடிகைகளையும் தொடர்ந்து துன்​புறுத்தி வருகிறார். நாங்​கள் பழகிய​தாக​வும் திருமணம் செய்​வ​தாகக் கூறி ஏமாற்றியதாக​வும் பொய்​ கதைகளைப் பதி​விட்டு வரு​கிறார்.

இந்​தி​யா​வில் பெண்​களுக்கு பாது​காப்​பான நகரம் சென்னை என்று சொல்​வார்​கள். அதை நிரூபிக்க, இது​போன்ற விஷமிகளுக்கு எதி​ராக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்’ என வேதனை​யுடன் தெரிவித்துள்​ளார்.

actress raveena ravi shares her distress with post
actress raveena ravi shares her distress with post