திருமணம் எப்போது என எனக்கே தெரியாது என்று ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகை பிரணிதா சுபாஷ்.

Actress Pranita About Marriage : தமிழ் சினிமாவில் கார்த்திக்கு ஜோடியாக சகுனி சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் பிரணிதா சுபாஷ்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களிலும் பிசியாக நடிகையாக நடித்து வருகிறார். இவருக்கு நேற்று நீண்ட நாள் காதலர் நிதின் ராஜு என்பவருடன் நேற்று திருமணம் நடைபெற்று முடிந்தது.

திடீரென நடந்து முடிந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பலரும் இது வதந்தி என கூறி வந்தனர். இந்த நிலையில் ப்ரணீதா இந்த லாக் டவுனில்இ எப்ப கல்யாணம் நடக்கும் என எங்களுக்கே உறுதியா தெரியாது. திருமணத்திற்கு அழைக்காததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஊரடங்கு முடிந்ததும் திருமணக் கொண்டாட்டம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.