கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தால் நடிக்கலாம் என இயக்குனர்கள் டார்ச்சர் செய்ததால் சினிமாவை விட்டு விலகி விட்டதாக நடிகை கல்யாணி கூறியுள்ளார்.
Actress Kalyani About Carrier Life : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தவர் கல்யாணி. சில படங்களில் நாயகியாக நடித்த இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தில் நடிகை சதாவின் தங்கையாக நடித்திருந்தார்.
அதன் பின்னர் சின்னத்திரை பக்கம் சென்ற கல்யாணி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என செட்டில் ஆகி விட்டார்.
தற்போது இவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சினிமாவில் இருந்து விலகி இதற்கான காரணம் என்ன என பேசியுள்ளார். அதாவது சில இயக்குனர்கள் நாயகியாக நடிக்க வேண்டுமென்றால் கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்தாக வேண்டும் என என் அம்மாவிடம் கூறினார்கள். அப்படியான வாய்ப்பு எனக்கு வேண்டாம் என சினிமாவை விட்டு விலகி கொண்டேன் என கூறியுள்ளார்.
நடிகை கல்யாணி இப்படி இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டு வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.