அஜித் குறித்து நடிகை பாவனா அளித்திருக்கும் சுவாரசியமான பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

மலையாளத் திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை பாவனா தமிழிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்திருந்தார். இவர் தமிழில் கடைசியாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அசல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருக்கும் இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் நடிகை பாவனாவிடம் தமிழில் உங்களது கடைசி படம் அஜித்துடன் நடித்த அசல். அஜித்துடன் பேசுறதுண்டா?? எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மிகவும் பரவசம் அடைந்து பதில் அளித்திருக்கும் பாவனாவின் பேட்டியின் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், “என்னால் அசல் படம் மறக்கவே முடியாது. ரொம்ப நல்ல அனுபவமா இருந்துச்சு. அஜித் சார் ரொம்ப அன்பாகவும் அக்கரையாகவும் பார்த்துக் கொண்டார். சமீபத்தில் துணிவு படத்தின் படப்பிடிப்பின் போது மஞ்சு சேச்சியிடம் தன்னை பற்றி விசாரித்திருக்கிறார்.

அதன் பிறகு அவரிடம் நான் போன் செய்து பேசினேன். அப்போது துணிவு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றதால் நேரில் சென்று அவரை சந்தித்தேன். அதன் பிறகு அஜித் சார், மஞ்சு சேச்சியுடன் இணைந்து மதிய உணவு சேர்ந்து சாப்பிட்டோம். அப்போது அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தான் நான் அவரது பிறந்தநாளுக்கு பதிவிட்டு இருந்தேன். அந்த நாள் எனக்கு மறக்க முடியாத நாள் ஆயிடுச்சு. அஜித் சார் என்கிட்ட பேச வேண்டிய அவசியம் இல்லை அசல் படம் எப்பவோ வந்தது ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவர் என்னை மறக்காமல் நலம் விசாரித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு அன்பாக இருக்கிறதுனால தான் அவரை எல்லோரும் கொண்டாடுகிறார்கள்” என அப்டேட்டியில் நடிகை பாவனா மிகவும் மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். இவரது இந்த தகவல் அஜித் ரசிகர்களை மகிழ்வித்து இணையத்தில் வைரலாகி வருகிறது.