விவாகரத்தான தயாரிப்பாளரை காதல் திருமணம் செய்ய உள்ளார் அஞ்சலி.
தமிழ் சினிமாவில் அங்காடித் தெரு என்ற படத்தில் மூலம் திரையுலகில் பிரபலமானவர் அஞ்சலி. தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் இவர் படங்களில் வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு கொஞ்ச காலம் விலகி இருந்து தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் ஜெய் காதலித்து பிரிந்த அஞ்சலி தற்போது தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற அந்த தயாரிப்பாளருக்கும் அஞ்சலிக்கும் இடையேயான நட்பு காதலாக மாறியதாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை அஞ்சலி விளக்கம் அளித்தால் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.