மாணவர் செய்த அத்துமீறலால் கோபமடைந்த நடிகை அபர்ணா பாலமுரளி பகிர்ந்து கொண்ட தகவல் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி. தமிழில் சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவருக்கும் பரிச்சயமான இவர் மலையாள திரை துறையை சார்ந்தவர். இவர் தற்போது மலையாளத்தில் வினீத் நடித்துள்ள ‘தன்கம்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இப்படத்தின் படக்குழுவினர் சட்டக் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது அபர்ணா பாலமுரளிக்கு பூ கொடுத்து வரவேற்ற மாணவர் ஒருவர், அவரின் தோல் மீது கைபோட்டு புகைப்படம் எடுக்க முயன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் கல்லூரியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அந்த மாணவன், ரசிகர் என்கிற முறையில் உணர்ச்சி வசப்பட்டு அப்படி நடந்து கொண்டதாக தெரிவித்திருந்தார். இது குறித்து நடிகை அபர்ணா பாலமுரளி, பெண்ணின் அனுமதி இன்றி தொடக்கூடாது என்பது சட்ட கல்லூரி மாணவருக்கு தெரியாதா, என கேள்வி எழுப்பி அந்த மாணவரின் செயலுக்கு தன்னுடைய கண்டனத்தை வெளிப்படுத்தினார். இவ்வாறு அவர் கோபத்துடன் பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.