நடிகர் யோகி பாபுவின் புதிய படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் தனது காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்து முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர்தான் யோகி பாபு. இவர் சிறந்த காமெடியனாக மட்டுமின்றி சிறந்த கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார். இவர் தற்போது மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா தமிழில் இயக்க இருக்கும் முதல் படமான “யானை முகத்தான்” என்னும் ஃபேண்டஸி கதையில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இதில் யோகி பாபு உடன் இணைந்து ரமேஷ் திலக், கருணாகரன், ஊர்வசி உட்பட பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தை தி கிரேட் இந்தியன் சினிமாஸ் தயாரிக்க இப்படத்துக்கு, கார்த்திக் எஸ்.நாயர் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் இப்படம் பற்றிஇயக்குனர் ரெஜிஷ் மிதிலா கூறும்போது, ‘மலையாளத்தில் எனது படம் மூலம் ரமேஷ் திலக் அறிமுகமானார். எனது ஒரு கதையை கேட்ட அவர், இதற்கு யோகிபாபு சரியாக இருப்பார் என்றார். அவர் சொல்லி, யோகிபாபுவை சந்தித்தேன். கதையை கேட்டதும் நடிக்கிறேன் என்றார். யோகிபாபுவே, கருணாகரன், ஊர்வசி ஆகியோரை அழைத்து நடிக்கச் சொன்னார். ஃபேன்டஸி படமான இதில், ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் வருகிறார். விநாயக பக்தரான அவர், கொஞ்சம் ஏமாற்றுப் பேர்வழி. அவரது வாழ்க்கையில் யோகிபாபு வந்ததும் என்ன விநோதங்கள் நடக்கிறது என்பதுதான் கதை. ராஜஸ்தானில் ஆரம்பித்து, சென்னை வரை படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். எனது அடுத்த படத்திலும் யோகிபாபுதான் நாயகன்’ என்று கூறியிருக்கிறார்.