திருப்பதியில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த பழம்பெரும் நடிகர் விஜயகுமார்..!
திருப்பதியில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார் பழம்பெரும் நடிகர் விஜயகுமார்.

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார். இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு இந்தி மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களை நடித்து தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளார்.
தற்போது மகள் ஸ்ரீதேவி மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து திருப்பதிக்கு சென்ற பெருமாளை தரிசனம் செய்துள்ளார்.சுவாமி தரிசனம் செய்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது அவர் பெருமாள் அழைக்காமல் அவரைப் பார்க்க முடியாது என்றும், தரிசனம் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.பிறகு அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

