நீ நடந்தால் நடை அழகு என தனது மகன் நடக்கும் அழகை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி அதன் பிறகு தொகுப்பாளர், நடிகர் என படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இடம் பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தனது அத்தை மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஆராதனா என ஒரு மகள் இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரு மகன் பிறந்தான். தனது மகனுக்கு குகன் என சிவகார்த்திகேயன் பெயர் சூட்டினார்.

அவ்வபோது தன்னுடைய மகனின் போட்டோக்களை வெளியிட்டு வரும் சிவகார்த்திகேயன் தற்போது அவன் நடந்து செல்லும் அழகை போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் நீ நடந்தால் நடை அழகு என பதிவு செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன் மகனின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதுக்குள்ள இவ்வளவு வளர்ந்துட்டானா என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.