ஜெயிலர் வெற்றி குறித்து நன்றி தெரிவித்து நடிகர் சிவராஜ்குமார் பதிவிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

கன்னட திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் சிவராஜ் குமார். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி அமோகமான வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி அடைய செய்து பாராட்டுகளை குவித்து வசூல் வேட்டையாடி வருகிறது. மேலும் இப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கன்னட நடிகர் சிவராஜ் குமார் படக்குழுவிற்கும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ஜெயிலர் திரைப்படம் நன்றாக ஓடுகிறது. வாய்ப்பளித்த நெல்சன் மற்றும் ரஜினி சாருக்கு நன்றி. ‘உங்கள் அன்பை என் இதயத்தில் வைத்திருப்பேன்’ ரசிகர்களுக்கும் மிக்க நன்றி” என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.