சலனமே இல்லாத மனிதர் அஜித்.. பார்த்திபன் புகழாரம்..!

அஜித்தை புகழ்ந்து பதிவு வெளியிட்டு உள்ளார் பார்த்திபன்.

actor parthiban tweet about ajithkumar
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி இருந்து. அதனைத் தொடர்ந்து தற்போது கார் ரேஸில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.
அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அஜித் குறித்து பேசியுள்ளார்.
Dicision ma’king’ அஜித் தான்.. சலனமே இல்லாத மனிதர் கவனமே சினிமா மீதும் தன் தனிப்பட்ட வாழ்க்கை மீதும் பெரும்பலம் கொண்ட தன் சினிமா புகழையும் ரசிகர் கூட்டத்தையும் அடித்தலமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர் தன்னை நேசிக்கும் கூட்டத்தின் பாதுகாப்பும் இது அக்கறை கொண்டவர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ப்ரோமோஷனுக்கு கூட வராமல் தனக்கான உலகத்தில் பயணிக்கும் ஞானி மனநிலை மனிதர் ஆச்சரியமான அபூர்வ பிறவி எல்லோருக்கும் நல்ல நண்பர் எனக்கும் என பதிவிட்டு உள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
decision ma’KING’ Ajith தான் ! சலனமே இல்லாத மனிதர். கவனமே சினிமா மீதும் தன் தனிப்பட்ட வாழ்க்கை மீதும். பெரும்பலம் கொண்ட தன் சினிமா புகழையும் ரசிகக் கூட்டத்தையும் அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர்.தன்னை நேசிக்கும் கூட்டத்தின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர். எனவே…
— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 14, 2025