முதல் முறையாக தனது மகனின் போட்டோவை வெளியிட்டுள்ளார் மிர்ச்சி செந்தில்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். இதனைத் தொடர்ந்து இவர் இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியல் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சரவணன் மீனாட்சி தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட செந்திலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தான் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தன்னுடைய மகன் போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது