போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாடிய நடிகர் கார்த்தியின் பேச்சு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் கார்த்தி. பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்போது ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வரும் அவர் தற்போது சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உள்ளார்.

அப்போது அந்நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு கார்த்தி கூறியுள்ள அறிவுரைகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், போதைப்பொருள் பயன்படுத்துபவர் நம்மிடையே இருப்பவர் தான், போதைப்பொருள் விற்பவரும் நம்மிடையே இருப்பவர்தான், போதைப்பொருளை புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர் தான். ஆனால் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் போதை பொருளை தடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

மேலும் போதைப் பொருள்களை பயன்படுத்துவதில் வீரத்தை காட்டாமல் விளையாட்டில் வீரத்தை காட்டுங்கள். நம் அரசும் விளையாட்டுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்து வருகிறது என்று இளைஞர்களுக்கு அறிவுரையாக கூறியுள்ளார். அது தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.