நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்திய வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளுடன் மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள நடிகர் தனுஷ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்து நேர்த்திக்கடனாக தனது மகன்களுடன் மொட்டை அடித்துள்ளார். அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

https://twitter.com/sprvn05/status/1675752860460498944?t=VPuCohcoSc1wNGyZrBXmpw&s=19