திரையரங்குகள் திறக்கப்படும் படங்கள் ரிலீஸ் ஆகாது என நடப்பு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருப்பதாக அறிவித்துள்ளார் பாரதிராஜா.
Active Producer Council Decison on Movie Release : கொரானா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து கொண்டே இருக்கும் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இப்படியான நிலையில் வரும் நவம்பர் 10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் மூலமாக பாரதி ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், டிஜிட்டல் நிறுவனங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கும் வரை புதிய படங்களை ரிலீஸ் செய்யப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏற்கனவே தங்களது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.