பிக் பாஸ் வீட்டினுள் முதலில் காதல் கொண்ட அபிராமி, லாஸ்லியா மற்றும் கவின் இருவரை பற்றி கூறியது.
Abirami Open Talk About Losliya : சென்ற வாரம் நேயர்களின் ஓட்டு குறைவாக பெற்றதை தொடர்ந்து அபிராமி வெளியேற்றப்பட்டார்.
பிறகு அபிராமி வீட்டை விட்டு வெளியேறிய உடன் முதலில் செய்த வேலைபார்த்தது தான். அவர் நடிப்பில் வெளிவந்த “நேர்கொண்ட பார்வை” படத்தை பார்த்து அதற்கு ரசிகர்களின் வரவேற்பை பார்த்தும் அபிராமிக்கு கிடைத்த விமர்சனங்களும் பார்த்து மிகவும் சந்தோசம் அடைந்து உள்ளார்.
பிறகு, அபிராமி ஒரு பேட்டியில் பேட்டியாளரின் கேள்விக்கு நிறைய சுவாரஸ்யமான பதில்கள் அளித்தார். அதில் குறிப்பாக லாஸ்லியா பற்றி கேட்டதற்கு “லாஸ்லியா” எனது “செல்ல பாபா” என்று தெரிவித்தார்.
அப்படி அழைக்க காரணம் என்ன என்று கேட்டதற்கு, வீட்டில் இருக்கும் போது லாஸ்லியா தனது அக்கா பற்றி கூறி முடித்த பிறகு, என் பக்கத்தில் அமர்ந்தார்.
அப்பொழுது அவரிடம் நான் உனக்கு அக்காவாக இருப்பேன் என்று கூறினேன். அன்று முதல் அவரின் மேல் எனக்கு தனி பிரியம் உண்டு.
நடிகர் மாதவனின் புது முயற்சியில் இணையும் பிரபலம்.!
அடுத்து, கவின் மற்றும் லாஸ்லியாவின் காதலை பற்றி கேட்டதற்கு, ” அவர்கள் இடையில் ஒரு நல்ல புரிதல் உள்ளது.
மேலும் அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்” என்றம் கூறினார். இது மட்டுமின்றி நானும் லாஸ்லியாவும் குறைந்த நாட்களில் மிகவும் ஆழமான நட்பை உருவாக்கி கொண்டோம்.
நானும், லாஸ்லியாவும் வீட்டுக்குள் இருக்கும் சமயத்தில் சிறை சென்ற போது, அந்த நட்பு அதிகமானது.
நாங்கள் நிறைய பேசி இருக்கிறோம். அந்த விஷயங்கள் அனைத்தும் மிகவும் தனிப்பட்டது என்றும் அதனை பகிர முடியாது என்றும் கூறினார்.