ஆயிஷா சொன்ன வார்த்தையால் முகத்துக்கு நேராக திட்டி உள்ளார் அசல் கோலார்.

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இரண்டு நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

மொத்தம் 20 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் ஒருவராக நடிகை ஆயிஷா கலந்து கொண்டுள்ளார். சத்யா சீரியல் புகழ் நாயகியான இவர் சக போட்டியாளரான கானா பாடகர் அசல் கோலாரை வாடா போடா என பேசியுள்ளார்.

இதனால் கடுப்பான அந்த பாடகர் முகத்துக்கு நேராக என்னை வாடா போடா என பேச வேண்டாம் என சொல்லிவிட ஆயிஷா தனிமையில் அமர்ந்து கண்ணீர் விட்டு உள்ளார். இதனால் அருகில் இருந்த சீரியல் நடிகர் அஸீம் ஆயிஷாவுக்கு ஆறுதல் கூறி தேற்றியுள்ளார்.

நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாளே நடிகை கண்ணீர் விட்ட சம்பவம் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.