“என் வாழ்நாள் முழுவதும் நான் உன்னை காதலிக்க போகிறேன்”: பொன்னி சீரியல் வைஷ்ணவி நெகிழ்ச்சி..!

Web Ads

பொன்னி சீரியல் வைஷ்ணவி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பொன்னி. ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமாகி பொன்னி சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் வைஷ்ணவி.

இவர் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெற்றி வசந்த் என்பவருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீரியல் பிரபலங்கள் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ponni serial vaishnavi latest post update
ponni serial vaishnavi latest post update

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு வைஷ்ணவி வெற்றி வசந்த் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் அதில், என் வாழ்க்கையை இவ்வளவு ஆழமாகத் தொடும் ஒருவரை நான் கண்டுபிடிப்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. என் வாழ்நாளில் நான் எதிர்பார்க்காத ஒன்று நீங்கள். எனக்கு சுவாசிக்க ஒரு புது காரணத்தை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள் உங்களுக்காக போராடவும் உனக்காக சமரசம் செய்யவும் தேவைப்பட்டால் என்னை தியாகம் செய்யவும் நான் உன்னை நேசிக்கிறேன்.என் வாழ்நாள் முழுவதும் நான் உன்னை காதலிக்க போகிறேன். மேலும் நீங்கள் செய்யும் அனைத்திற்கும் நான் நன்றி உள்ளவளாக இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவை இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.