விஜய் அரசியலுக்கு வர யார் காரணம்?: வைரலாகும் நிகழ்வு..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வரும் 9-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதன் பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார்.
இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகை பற்றி மன்சூர் அலிகான் கூறியதாவது, ‘முதலில் நானும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால், அதன் பிறகே அவர் யாரால் அரசியலில் இறக்கி விடப்பட்டிருக்கிறார் என்று தெரிந்தது. எம்.ஜி.ஆர். போன்று மக்கள் போராட்டம் செய்து அவர் அரசியலுக்கு வந்திருந்தார் என்றால் நாடே அவருடன் நிற்கும். ஆனால், அவர் மக்கள் போராட்டம் செய்யவில்லை.
விஜய் ஒரு நல்ல நடிகர். அவரை நடிகராக பார்க்கவே மக்கள் விரும்புகிறார்கள். ஜனநாயகன் படத்திற்கு பிறகு, அவர் இனி படங்களில் நடிக்க மாட்டார் என்பதால் அவர் மீது அன்பு காட்டுகிறார்கள் மக்கள். அவர் அரசியலுக்கு வரக் கூடாது, ஆட்சியை பிடிக்கக் கூடாது என நான் சொல்லவில்லை. அவர் களத்தில் இறங்கி போராட வேண்டும் என்று தான் சொல்கிறேன்’ என்றார்.
தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து அழகு பார்த்திருக்கும் ரசிகர்களுக்காக விஜய் பல கோடிகளில் சம்பளம் வரும் சினிமா வாழ்க்கையை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருப்பதாக விஜய் தொடர்ந்து கூறி வருகிறார். இச்சூழலில. விஜய்யை அரசியலில் இறக்கிவிட்டவர் பற்றி தெரிந்ததும் அவரை ஆதரிக்கவில்லை என்று மன்சூர் கூறியிருக்கிறாரே. அவர் யாராக இருக்கும் என சினிமா ரசிகர்கள் கேட்பது வைரலாக தொடர்கிறது.
