எனது குடும்பத்தில் டிஜிட்டல் கைது நடந்துள்ளது: நாகார்ஜுனா பரபரப்பு பேச்சு..

Web Ads

ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படத்தில் ஸ்டைலிஸ்ட் வில்லனாக நாகார்ஜுனா நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில், தற்போது ஐதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தலைமையில் ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, எஸ்.எஸ். ராஜமவுலி, தில் ராஜு, சுரேஷ்பாபு போன்ற பல பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், பேசிய நாகார்ஜுனா, ‘தனது குடும்பத்தில் ஒருவர் 6 மாதங்களுக்கு முன்பு 2 நாட்கள் டிஜிட்டல் கைதுக்கு ஆளானதாக கூறினார்.

காவல்துறையினரை அணுகினால் பிரச்சினை தீர்க்கப்படும் எனவும் மோசடிகளை தடுப்பதில் காவல்துறையின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றும் நாகார்ஜுனா கூறினார். தற்போது நாகார்ஜுனா, குடும்பத்தில் டிஜிட்டல் கைதுக்கு ஆளான அந்த நபர் யார் என்பது குறித்து இணையத்தில் விவாதம் நடந்து வருகிறது.

in our family has been digitally arrested nagarjuna comments
in our family has been digitally arrested nagarjuna comments