காந்தாரா 2 : தமிழகத்தில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..முழு விவரம் இதோ.!!

காந்தாரா 2 படத்தின் தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் 400 கோடிக்கும் மேல் வசூலும் செய்திருந்தது.
இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி தற்போது வெளியாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம்,குல்க்ஷன் தேவையா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழகத்தில் மட்டுமே முதல் நாளில் ஆறு கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
