சுந்தரவல்லி வீட்டில் நடக்கும் சுமங்கலி பூஜை.. வீட்டுக்கு வரும் ஸ்பெஷல் கெஸ்ட்.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Web Ads

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 10-08-25
moondru mudichu serial today promo update 10-08-25

நேற்றைய எபிசோடில் சூர்யா அசோகனை எழுப்பி மிக்ஸி ஜார் காண்பித்து இத பத்தி டீடைலா சொல்லு என்று சொல்ல இதெல்லாம் அந்த மாதவியும் சுரேகாவும் செய்த வேலை நந்தினியோட கையை உடைப்பது தான் பிளான் இந்த திட்டம் தெரியாம நான் கைய வச்சுட்டேன் என்று சொல்ல, பிறகு உண்டி கோல் கொடுத்து இந்த விஷயத்தையும் சொல்லு என்று சொல்ல அது நான் போட்ட பிளான் தான் கடைசியா எனக்கே வனையாக வந்துடுச்சு என்று சொல்ல பிறகு சொம்பு எடுத்துக்காட்டுகிறார் எல்லாம் உண்மையே சொல்லிவிட மாதவி அசோகனை திட்டுகிறார். உடனே சூர்யா எல்லாமே இந்த வீட்ல இருக்கிறவங்க தான் பண்ணி இருக்காங்க இதுக்கு என்ன டாடி பதில் சொல்றீங்க என்று சூர்யா கேட்கிறார். இது மட்டும் இல்லாம இந்த வீட்ல நந்தினிக்கு நடந்த பல பிரச்சனைக்கும் இவங்கதான் காரணமா இருப்பாங்க என்று சொல்லுகிறார்.

இவ இந்த வீட்டை விட்டு போகணும் என்று சுந்தரவல்லி சொல்ல அவ எங்கேயும் போக மாட்டா அவ இந்த வீட்லதான் இருப்பா என்று சூர்யா சொல்ல அப்போ இது மாதிரி தான் நடக்கும் சுந்தரவல்லி கோபப்பட இதுக்கு மேல நந்தினி யாரும் எதுவும் செய்ய முடியாது அதுக்கு பதில் நான் திருப்பி நிறைய செய்வேன். இதுக்கு மேல நந்தினிக்கு இந்த வீட்டில எதுவும் நடக்க கூடாது என்று வார்னிங் கொடுத்துவிட்டு கோபமாக அழைத்துச் செல்கிறார். ரூமுக்கு வந்த நந்தினி பாயை எடுத்துப் போட கை வலியில் கத்த உடனே சூர்யா அவருடைய கையில் இருக்கும் கட்டை கழட்டுகிறார் எதுக்கு சார் கழட்டறீங்க ஏதாவது தூசிப்படும் என்று சொல்ல எனக்கு எப்பயோ கை சரியாயிடுச்சு என்று சொல்லுகிறார். பிறகு உட்கார வைத்து நந்தினிக்கு மயில் இறகால் கைக்கு மருந்து போடுகிறார்.

இந்த கையை வச்சுக்கிட்டு நீ எந்த வேலையும் பார்க்காத, இந்த வீட்டில உனக்கு எதிரா இவ்வளவு விஷயம் பண்ணி இருக்காங்க உனக்கு கோபம் வரலையா என்று கேட்க கோபம் வருது தான் என்று சொல்ல அப்ப ஏன் கேட்க மாட்டேங்கிற என்று சொல்ல எனக்கு இவங்க யாருமே தேவையில்லை நான் இங்கிருந்து கொஞ்ச நாள்ல போயிடுவேன் இதுக்கு எதுக்கு நான் கேட்கணும் இந்த குடும்பத்தில் எனக்கு உயிர் பிச்சை கொடுத்திருக்கீங்க அதை என்னைக்கும் நான் மறக்க மாட்டேன் என்று சொல்லுகிறார். மறுபக்கம் மொட்டை மாடியில் அசோகனை உட்கார வைத்து மாதவி சுரேகா சந்திரவல்லி மூவரும் கோபப்பட்டு திட்டிக் கொண்டிருக்க கல்யாணம் சாப்பிட கூப்பிடுகிறார்.

சுரேகா சூர்யா அண்ணன் சாப்பிட்டாரா என்று கல்யாணத்திடம் கேட்க இல்லை என்று சொன்னவுடன் முதல்ல அவர் சாப்பிட்டோம் அப்புறம் நாங்க சாப்பிடுறோம் என சொல்லி அனுப்புகிறார். மாதவி நீ எதுக்கு இப்படி சொல்ற என்று சொல்ல இப்போதைக்கு நந்தினிக்கு அடிபட்டது காரணம் நம்ம தானே தெரிஞ்சிருக்கு அதனால அவன் கண் பார்வையிலிருந்து ஒதுங்கி இருக்கிறது தான் நல்லது என்று சொல்லுகிறார். கல்யாணம் சூர்யாவை சாப்பிட கூப்பிட எனக்கு பசிக்கல நான் அப்புறம் சாப்பிட்டுகிறேன் என்று சொல்ல, நீ சாப்பிடலையா நந்தினி என்று கேட்க சாப்பிடல எனக்கு பசிக்கல என்று சொல்லுகிறார். அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க அருணாச்சலம் அவள எந்த வேலையும் செய்ய விடாத என்று சொல்ல அக்கறை பொங்குதா என சுந்தரவல்லி கேட்கிறார். உடனே சூர்யா நந்தினி சாப்பிட அழைத்து வந்து உட்கார வைக்கிறார்.

உடனே கல்யாணத்தை கூப்பிட்டு உனக்கு பொறுப்பு இருக்கா ரெண்டு பேர் உட்கார்ந்து இருக்கும் சாப்பாடு வைக்கலையா என்று கேட்க கல்யாணம் சாப்பாடு பரிமாறுகிறார். பிறகு உனக்கு அடிப்பட்ட கையால் நீ எப்படி சாப்பிடுவ நானே ஊட்டி விடுவேன் என சொல்ல நந்தினி வேண்டாம் என சொல்லியும் சூர்யா யாரைப் பற்றியும் நீ கவலைப்படாத என்று சொல்லி ஊட்டி விட, அசோகன் எனக்கு கை அடிப்பட்டிருக்கு கண்ணு தெரியல ஆனா என் பொண்டாட்டி என்ன கண்டுக்கவே மாட்டேங்குற நீ தாங்குறியே மாப்பிள்ளை என்று சொல்லுகிறார். இதனால் சுந்திரவல்லி கடுப்பாகி சென்றுவிடும் மாதவி சுரேகா இருவரும் சென்று விடுகின்றனர். ஆனாலும் சூர்யா நந்தினிக்கு ஊட்டி விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான புரோமோவில் கோலாகலமாக சுமங்கலி பூஜை ஏற்பாடுகள் செய்ய சுந்தரவல்லி நந்தினி இடம் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் எங்கேயாவது வெளியே போயிடு என்று சொல்ல நந்தினியும் கண்கலங்கி கொண்டு சென்று விடுகிறார். அருணாச்சலம் சூர்யாவிற்கு ஃபோன் போட்ட நந்தினி ரூம்ல இருக்காளா என்று கேட்க இல்லை என்று சொல்ல அதிர்ச்சி அடைகிறார். பிறகு நந்தினி நடந்து கொண்டு சென்ற போது சுந்தரவல்லி வீட்டுக்கு வரும் கெஸ்ட் பார்த்துவிட்டு நந்தினியை வீட்டுக்கு அழைத்து வருகிறார் கெஸ்ட் உடன் வந்து நந்தினி இறங்குவதை பார்த்து சுந்தரவள்ளியும் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர். என்ன நடக்கப் போகிறது என்ற எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 10-08-25
moondru mudichu serial today promo update 10-08-25