குற்ற உணர்ச்சியில் மீனா, முத்து எடுக்கப் போகும் முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

Web Ads

மீனா குற்ற உணர்ச்சியில் இருக்க, முத்து முடிவு என்ன எடுக்கப் போகிறார் என்பது குறித்து பார்க்கலாம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 30-06-25
SiragadikkaAasai Serial Today Episode Update 30-06-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் ஷெட்டுக்கு கோபமாக வந்து இறங்க செல்வம் உன்ன பாக்க ஒருத்தவங்க வந்து இருக்காங்க என்று சொல்ல யார் என்று முத்து கேட்க அருண் அம்மா வந்து நிற்கிறார். இப்ப எதுக்கு இங்க வந்து இருக்காங்க என்று கோபப்பட நீங்கள் கோபப்படுவீர்கள் என்று தெரியும் தம்பி ஆனால் நான் பேச வேண்டியது பேசிட்டு போய்விடுகிறேன் என்று சொல்லுகிறார். நான் உங்ககிட்ட தனியாக பேசணும் என்று சொல்ல செல்வம் சென்று விடுகிறார்.அருண் நல்ல பையன் தான் ஆனா உங்களுக்குள்ள நடந்த சின்ன சின்ன மனக்கசப்புல நீங்க அருணுக்கு சீதாக கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேங்கிறீங்க.

சீதாவோட வீட்டுல உங்களோட சம்மதத்தை தான் கேட்கிறாங்க. சீதாவை நான் நல்லபடியா பார்த்துப்பேன் என் பையன் அருண் நல்லா பாத்துப்பான். இதே சீதா இடத்துல அவங்க அப்பா இருந்தா அவளுக்கு புடிச்ச உங்களோட சேர்த்து வெச்சி இருப்பாங்க என்று சொல்ல முத்துவின் முகம் மாறுகிறது. எதுவா இருந்தாலும் யோசிச்சு ஒரு நல்ல பதிலா சொல்லுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். கொஞ்ச நேரத்தில் செல்வமும் வந்து இவ்வளவு ஆனதுக்கு அப்புறமும் எனக்கு தெரிஞ்சு நீ அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு விடலாம் அந்த பொண்ணு விருப்பப்பட்டிருந்தால் அருணை கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணி இருக்கலாம் ஆனா உன்னோட சம்மதித்துக்காக தான் காத்து கற்றிருக்காங்க அதனால நீயே கல்யாணம் பண்ணி வச்சிடு என்று சொல்ல முத்து அமைதியாக இருக்கிறார்.

மறுபக்கம் விஜயா பணத்தை எண்ணிக் கொண்டிருக்கிற ரோகிணி வருகிறார். மனோஜ் என்ன பணம் என்று கேட்கிறார் வீட்டு வாடகை இன்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார் உடனே ஒரு லட்சம் பணத்தை கொடுத்து. இது எங்க இருந்து வாங்கிட்டு வந்த கள்ள நோட்டா என்று கேட்க கள்ள நோட்டு அடிக்கிறவங்கள எல்லாம் எனக்கு தெரியாது ஆன்ட்டி என்று சொல்லுகிறார் இது ஒன்னு நீ திருட்டு நகையை கொடுத்ததுக்காக இல்ல, என்கிட்ட பொய் சொல்லி ஏமாத்துனதுக்காக என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். உடனே ரூமுக்குள் கோபமாக வந்து நின்ற ரோகினி இடம் மனோஜ் இந்த பணம் எங்க வாங்கினேன் இருக்கு வித்யா கிட்ட என்று சொல்லுகிறார் வித்யா கிட்ட தான் சண்டை போட்டியே என்று கேட்க சமாதானம் ஆயிட்டோம் என்று சொல்லுகிறார். ஆனால் மனோஜ் நம்பாமல் இருக்க, இதுக்கு எப்படி என்ன நம்பாமல் இருப்பதற்கு என்னை சாகடித்து விடு என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்.

முத்து ஒருநாள் விஷம் குடித்த பெண்ணே காப்பாற்றிய வீட்டுக்கு வரச் சொல்ல அந்த பெண்ணின் அம்மா வரவேற்கிறார். என்ன விஷயமா எதுக்கு வர சொன்னீங்க என்று கேட்க அந்தப் பெண்ணின் அம்மா என் பொண்ணுக்கு அவ காதலிக்கிற பையனையே கல்யாணம் பண்ணி வச்சிட்டோம் என்று சொல்ல முத்துவின் முகம் மாறுகிறது உடனே பெண்ணின் அப்பா நானும் முதல்ல தப்பா தப்பா நினைச்சேன் அப்புறம் பழகி பார்த்தால் தான் தெரியுது எப்பவுமே காதலிக்கிறவங்க தப்பான முடிவு தான் எடுப்பாங்கன்னு கிடையாது பெத்தவங்க பார்த்து வைக்கிறேன். கல்யாணம் கூட பல இடத்துல தப்பா இருக்கு அதனால நான் பழகி பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது மாப்பிள்ளை ரொம்ப தங்கம் என்று சொல்ல பிறகு மீண்டும் முத்துவிடம் நன்றி சொல்லுகின்றனர்.

பிறகு முத்து என்ன நினைக்கிறார்? சீதாவின் விஷயத்தில் முத்து எடுக்க போகும் முடிவு என்ன? மீனா என்ன நினைக்கிறார்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 30-06-25
SiragadikkaAasai Serial Today Episode Update 30-06-25