பிரபலங்களின் லைப் ஸ்டைலில் ஒன்றாகவே மாறி உள்ளது திருமணம் விவாகரத்து போன்ற விஷயங்கள்.
சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபலங்களாக இருந்து வருபவர்களுக்கு திருமணம் விவாகரத்து போன்றவைகள் எல்லாம் மிகவும் சாதாரண விஷயங்களாகி விட்டன.
காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு கருத்து வேறுபாடு என பிரிந்து வாழும் பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது.
சின்னத்திரையில் தொகுப்பாளர்களாக வலம் வருபவர்கள் கூட இதில் அடங்கி விடுகின்றனர். திருமணம் ஆகி ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்த தொகுப்பாளர்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
- டிடி திவ்யதர்ஷினி
தனது பள்ளி பருவ நண்பரை காதலித்து திருமணம் செய்த திவ்யதர்ஷினி திருமணமான கொஞ்ச நாளில் அவரை பிரிந்து விவாகரத்து பெற்றார்.
- பிரியங்கா
விஜய் டிவியின் தற்போது நம்பர் 1 தொகுப்பாளினியாக இருந்து வரும் பிரியங்காவும் தன்னுடன் பணியாற்றியவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது இவரும் கணவரை பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்.
- விஜே ரம்யா
விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்து தற்போது வெள்ளித்திரையில் படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அப்ரஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2015 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
- விஜே மகேஸ்வரி :
தொகுப்பாளியாக பயணத்தை தொடங்கி தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் இவர் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு அம்மாவா அந்த நிலையில் தனது கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
- ரேஷ்மா பசுபலேட்டி :
செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி பிறகு தொகுப்பாளியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தற்போது நடிகையாக சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் நடித்து வரும் இவரும் தனது கணவரை விவாகரத்து செய்து தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இவர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் இன்னும் பல பிரபலங்கள் திருமணமான வேகத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.