தர்ஷன் வெளியேறியது பற்றி பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே வெளியேறிய வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Vanitha vijayakumar warned darshan in biggboss home – பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று தர்ஷன் வெளியேற்றப்பட்டார். இது பிக்பாஸ் வீட்டிலிருந்தவர்களுக்கு மட்டுமில்லாமல், இதுவரை இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு வந்தவர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, விஜய் தொலைக்காட்சிக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒருபக்கம், ஷெரினால்தான் தர்ஷன் வெளியேறினார் என பலரும் கூறி வருகின்றனர். இதை பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே வனிதா விஜயகுமார் கூறியிருந்தார். இது தொடர்பாக அவருக்கும், ஷெரினுக்கும் இடையே மோதலும் உருவானது. தர்ஷனும் வனிதாவை நம்பாமல் ஷெரினுக்கு ஆதரவாக பேசினார். ஆனால், தற்போது தர்ஷன் வெளியேறியுள்ளதால் வனிதா கூறியது சரிதான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள வனிதா ‘நான் ஷெரினை ஊக்கப்படுத்தினேன். ஆனால், அவரின் திட்டம் எனக்கு புரிந்த பின் நான் தர்ஷனை எச்சரித்தேன். ஆனால், நான் அவனை டார்கெட் செய்வதாக நினைத்தான். ஷெரினை நம்பினான். புரியவைக்க முயற்சிகள் எடுத்தேன். ஆனால், அவர்கள் இருவரும் நான் பொய் சொல்கிறேன் என நினைத்தனர்’ என பதிவிட்டுள்ளார்.
For people who think I hate #Tharshan #TharshanArmy this is the truth.first I motivated #Sherin and kept asking her to focus. When I realized her game I warned him.he thought I was targeting him and he trusted her.i seriously made an effort.they both called me a liar. https://t.co/iGKd6GciNr
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) September 28, 2019