தர்பார் படத்திற்கு தடை கேட்டு பிரபல நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தர்பார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் மலேசியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றால் பட ரிலீசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2 பாயிண்ட் ஓ படத்திற்காக லைகா நிறுவனம் வாங்கிய 20 கோடி கடனை திருப்பி கொடுக்க வேண்டும். இல்லையேல் படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஜனவரி 3-ம் தேதிக்குள் பதிலலிக்குமாறு லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.