டாஸ்மாக் ஊழியர்களுக்கான பொது பணியிட மாறுதல், மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு ஆகியவற்றின் மீது சென்னை உயர்நீதிமன்றம் பிறபித்துள்ள தடை ஆணையை நீக்குவதற்கு நிர்வாகம் முறையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
கடை ஊழியர்களுக்கு மருத்துவ செலவை உடனடியாக தரவேண்டும். மேலும், டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் . இதுபோன்ற 15அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணிக்கு ஆர்பாட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.