
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் திடீரென டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
மருத்துவமனை செக்யூரிட்டி தாக்கப்பட்டதை கண்டித்து டாக்டர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தால் அம்மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த திடீர் வேலை நிறுத்த போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.