நடிக்க வந்த வேகத்தில் பிரபல சீரியலில் இருந்து பிரியங்கா வெளியேறுவதாக வெளியான தகவலுக்கு டிவி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஜீ தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
தொடங்கிய நாள் முதல் தற்போது வரை டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வரும் இந்த சீரியலில் நாயகியாக ரோஜா சீரியல் பிரபலம் பிரியங்கா நல்காரி நடித்து வர ரேஷ்மா பசுபதி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
பிரியங்காவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்ற இந்த நிலையில் அவர் இது சீரியலில் இருந்து விலகப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வைரலாகி வருகிறது.
இது குறித்து தொலைக்காட்சி தரப்பில் விசாரிக்கையில் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் உண்மை அல்ல, பிரியங்கா இந்த சீரியலில் மிகவும் விருப்பப்பட்டு தான் நடித்து வருகிறார். அவருக்கு சீரியலில் இருந்து வெளியேறும் எண்ணம் கிடையாது, தொடர்ந்து சீதாவாக பிரியங்கா நல்காரி நடிப்பார் என தெரிவிக்கின்றனர்.
ஆனால் உண்மை என்ன என்பது இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கலாம்.