யாரும் நம்பி ஏமாந்து விடாதீங்க என ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்து விஷால் மேனேஜர் ஹரி கிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஷால். இவரது நடிப்பில் அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.
இந்த நிலையில் நடிகர் விஷாலின் மேனேஜரான ஹரி கிருஷ்ணா அவர்களின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரது கணக்கில் இருந்து எனக்கு உடனடியாக பணம் தேவைப்படுகிறது என பலருக்கு மெசேஜ் சென்றுள்ளது.
இதனை அறிந்த ஹரி கிருஷ்ணா உடனே ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். தன்னுடைய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. தயவுசெய்து இந்த கணக்கில் இருந்து வரும் மெசேஜ்களை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்த இவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.