சமந்தாவின் தந்தை தனது சமூக வலைதள பக்கத்தில் சமந்தாவின் திருமண புகைப்படங்களை பதிவிட்டு ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சமந்தா. ஆரம்பத்தில் எதார்த்தமான நடிப்பின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்த இவர் நாகசைதன்யா உடன் விவாகரத்து பெற்ற பிறகு கவர்ச்சியில் களம் இறங்கி ஒரு கலக்கு கலக்கி வருகிறார். தற்போது டாப் ஹீரோயினியாக இருக்கக்கூடிய சமந்தா பிசியான நடிகையாக மாறிவிட்டார்.

இந்நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு தனது பேஸ்புக் பக்கத்தில் சமந்தாவின் திருமண புகைப்படங்களை பதிவிட்டு ” நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு கதை இருந்தது, அது தற்போது இல்லை அதனால் நாம் புதிய கதையின் அத்தியாயத்தை தொடங்கலாமா என்று குறிப்பிட்டு ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறியுள்ள அந்த புதிய அத்தியாயம் என்பது சமந்தாவின் இரண்டாவது திருமணம் பற்றியா? என்று ரசிகர்களின் இடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவியும் வருகிறது.