நடிகை கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பின் போது தங்கக்காசுகளை பரிசளித்துள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருக்கும் இவர் இப்படத்தை தொடர்ந்து சைரன், ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் தெலுங்கில் நாணியுடன் இணைந்து தசரா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்திருந்த நிலையில் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பின் போது படத்தில் பணியாற்றிய 130 நபர்களுக்கு தல 2 கிராம் மதிப்புள்ள தங்கக்காசை நடிகை கீர்த்தி சுரேஷ் பரிசாக தந்திருக்கிறார். இது தொடர்பான தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் பலரும் கீர்த்தி சுரேஷை பாராட்டி வருகின்றனர்.