3 ஆண்டுகளுக்கு விஜய் பிரேக் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். அதன் பிறகு விஜய் அரசியலுக்கு வர உள்ளார் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் தளபதி 68 படத்தை முடித்து விட்டு 3 ஆண்டுகள் பிரேக் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.