Vijay Sethupathi Controversy Speech About Temples
Vijay Sethupathi Controversy Speech About Temples

சாமியை குளிக்க வைக்கும் போது மட்டும் காட்டுகிறீர்கள் உடை மாற்றும் போது மட்டும் ஏன் மறைக்கிறீர்கள் என விஜய் சேதுபதி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Vijay Sethupathi Controversy Speech About Temples : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வரும் இவர் தற்போது மாஸ்டரில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி கடவுளைப் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதுமட்டுமல்லாமல் ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் பற்றி பேசிய பேச்சு குறித்து சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு விஜய் சேதுபதி ஆதரவு அளித்ததால் அதுவும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதுக்கு நீங்க ட்ரஸ் இல்லாமலே இருக்கலாம் – நடிகையை விளாசிய நெட்டிசன்கள்.!

இந்த நிலையில் இவர் சன் டிவியின் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கிய போது அதில் இந்து கடவுளை பற்றி பேசியிருப்பது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

அதாவது கோவிலில் சாமியை அபிஷேகம் செய்யும் போது பக்தர்களை பார்ப்பதற்கு அனுமதிப்பார்கள் ஆனால் அதுவே உடை மாற்றும் போது திரையால் மறைத்து விடுவார்கள்.

இதேபோல் ஒரு கோவிலில் நடைபெற அங்கிருந்த சிறுமி தன் தாத்தாவிடம் தாத்தா ஏன் திரையை மூடிவிட்டார்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு அந்தத் தாத்தா ஆமாம்மா சாமி குளிக்கும்போது காட்டுவார்கள் உடைமாற்றும்போது மறைத்து விடுவார்கள் என கூறியுள்ளார்.

குளிக்கும்போது காட்டுவது போலவே உடை மாற்றும்போது காட்டலாமே என அந்த சிறுமி மீண்டும் கிடுக்குப்பிடி கேள்வி கேட்டுள்ளார் என விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

விஜய் சேதுபதி இவ்வாறு பேசியது தற்போது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.