தளபதி 68 படத்தின் ஸ்டோரி குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜயுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள தனது 68 வது படத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இந்த படம் அப்பா மகனுக்கு இடையேயான ஈகோவை மையமாக வைத்து உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே வாரிசு படத்தின் கதையும் அப்பா, மகன் ஈகோவை வைத்து தான் உருவானது.
இதனால் திரும்பவும் அதே மாதிரியான கதையில் விஜய் நடிக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் இது குறித்த தகவலை வெளியிட தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.