விடாமுயற்சி படம் குறித்து சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக துணிவு என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.
எச் வினோத் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படம் குறித்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வருகிறது. படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படியான நிலையில் தற்போது அஜித் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
விரைவில் சூட்டிங் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.