பிரதீப் மீது வைக்கப்பட்டது பொய் குற்றச்சாட்டு பிக் பாஸ் வீட்டில் நடந்த விஷயங்களை போட்டு உடைத்துள்ளார் விசித்ரா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவுக்கு வந்த நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் பிரதீப் ஆண்டனி. ஆனால் அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்லி இருக்கார் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
போட்டியாளர்கள் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியது இந்த முடிவுக்கு காரணமாக அமைந்தது. ஆனால் பிரதீப் மீது எந்த தவறும் இல்லை என தற்போது வரை மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அர்ச்சனா விசித்ரா என இருவர் மட்டுமே பிரதீப்புக்கு ஆதரவாக கருத்து கூறியிருந்தனர். இந்த நிலையில் விசித்ரா பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன என்பது குறித்த உண்மைகளை உடைத்துள்ளார்.
அதாவது ஸ்மால் பாஸ் வீட்டு பாத்ரூமில் தாழ்ப்பால் இருக்காது. நானும் அதை பலமுறை சொல்லியும் நிகழ்ச்சிக்குள் அதனை கண்டு கொள்ளவில்லை. நான் குளிக்க சென்றால் கூட தாழ்பால் இல்லாமல் தான் குளிக்க வேண்டும். ஆகையால் பாத்ரூம் செல்லும்போது அனைவரிடமும் சொல்லிவிட்டு செல்வேன்.
அதேபோல் பிரதீப் இரவெல்லாம் தூங்காமல் முறைத்துக் கொண்டே இருப்பதாக குற்றம் சாட்டினர். அது உண்மை இல்லை பிரதீப் சீக்கிரம் தூங்கி விடுவான் மற்றவர்கள் தான் தூங்காமல் கதை பேசிக் கொண்டிருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.