திடீரென நடிகர் சூர்யாவை சந்தித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. மாநாடு படத்திற்கு பிறகு தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 68 படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படியான நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு ஏர்போர்ட்டில் எதிர்பாராத விதமாக நடிகர் சூர்யாவை சந்தித்துள்ளார்.
திடீரென எதிர்பாராத விதமாக இந்த சந்திப்பு நடந்ததாகவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யாவை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் வெங்கட் பிரபு பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த பதிவு