வலிமை படத்தின் டிக்கெட் அதிகமாக விற்கப்படுவதால் அஜித் ரசிகர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
Valimai Ticket Rate Issue in Dindigul : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் 1000 திரையரங்குகளிலும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 750 திரையரங்குகள் என பல்வேறு மொழிகளில் படு பிரம்மாண்டமாக இந்தப் படம் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் 1000 திரையரங்குகளிலும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 750 திரையரங்குகள் என பல்வேறு மொழிகளில் படு பிரம்மாண்டமாக இந்தப் படம் வெளியாக உள்ளது.
பல்வேறு இடங்களில் டிக்கெட் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் உள்ள ராஜேந்திரா ரசிகர்களின் ஷோக்கான டிக்கெட் விலை அதிகமாக இருப்பதால் அஜித் ரசிகர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பினர் இடையே இடையே சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.