இறுதி அத்தியாயத்தை நோக்கி பாக்கியலட்சுமி.. எமோஷனலாக பேசி வீடியோ வெளியிட்ட பாக்யா..!

பாக்கியலட்சுமி சீரியல் இறுதி அத்தியாயத்தை எட்டியுள்ளதால் சுசித்ரா எமோஷனலாக பேசியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இனியா விவாகரத்து கொடுப்பதாக முடிவு எடுக்க நிதீஷ் இனியாவை அசிங்கப்படுத்தும் விதமாக பதில் லெட்டர் கொடுத்திருக்கிறார்.
இதனால் இனியா கோபத்தில் சுதாகர் விட்டு முன் நின்று கோபமாக பேச சுதாகர் வீடியோ எடுத்து கோபி மற்றும் பாக்யாவிற்கு அனுப்பி விடுகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று பரபரப்பான கதைக்களத்துடன் இறுதிக்கட்டத்தை நோக்கி இந்த சீரியல் நெருங்கி வருகிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா எமோஷனலாக வீடியோ வந்து வெளியிட்டு உள்ளார் அதாவது இந்த சீரியல் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு நீங்கள் காரணம் உங்களுக்கு ரொம்ப நன்றி என்று ரசிகர்களை மிஸ் பண்ணுவதாக பேசியுள்ளார்.
இவர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் இந்த சீரியலை மிஸ் பண்ணுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram