TN CM EPS Speech in Madurai

மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து அவற்றை நிறைவேற்றும் ஒரே அரசு அதிமுக என தமிழக முதல்வர் பழனிசாமி பெருமிதம் கொண்டுள்ளார்.

TN CM EPS Speech in Madurai : தமிழகத்தில் புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு அம்மாவின் வழியில் தொடர்ந்து சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறது.

மேலும் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி ஈடுபட்டு வருகிறார்.

ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று மக்களை சந்தித்து அவர்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் வீர முத்தரையர் சமூகத்தினர் நடத்திய மாநாடு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் தமிழக அரசு தமிழக மக்களின் நலனிற்காக கொண்டு வந்த திட்டங்கள் குறித்து பேசினார்.

மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் ஒரே அரசு அதிமுக அரசு தான் என தெரிவித்துள்ளார். மேலும் முத்திரை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான வலையர் நலவாரியம் அமைக்க அம்மாவின் அரசு நடவடிக்கை எடுக்கும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக பேசினார்.

அடித்தளத்தில் இருக்கும் மக்களை முன்னேற்றத்திற்கு கொண்டுவர வேண்டும், அவர்களுக்கு தேவையான கல்வியை வழங்க வேண்டும், வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும், அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு அதிமுக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.