TN Announcement on Pongal Gift 2021 : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களின் தேவை அறிந்து திறம்பட செயலாற்றி வருகிறார் முதல்வர் பழனிசாமி.
இந்த நிலையில் தற்போது 2021 பொங்கல் பரிசாக ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி ஒரு முழு கரும்பு ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை மற்றும் முந்திரி ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் இதற்கான டோக்கன் வரும் ஜனவரி 4ஆம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அதிரடியான அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.