அழகிய காதல் கதையாக உருவாகியுள்ள தொட்டு விடும் தூரம் படம் பற்றி படத்தின் இயக்குனர் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படமாக அழகிய காதல் கதையை கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தொட்டு விடும் தூரம்.
வி. பி நாகேஸ்வரன் இப்படத்தை இயக்க விவேக் ராஜ், மோனிகா ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். உஷா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
தற்போது இயக்குனர் இப்படத்தின் கதை என்ன என்பது பற்றிய தகவலை கூறியுள்ளது, அதாவது சென்னை கல்லூரியில் படிக்கும் மோனிகா NSS கேம்ப்பிற்காக ஒரு ஊருக்கு செல்கிறார். அங்கு சமூக சேவை செய்யும் ஹீரோ விவேக்கை காதலிக்கிறார்.
அதன் பின்னர் சென்னை திரும்பி விடுகிறார். இதனையடுத்து விவேக் தன்னுடைய காதலியை தேடி சென்னை வருகிறார். அதன் பின்னர் என்னவெல்லாம் நடக்கிறது? இறுதியில் இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
இப்படம் உலகம் முழுவதும் ஜனவரி 3-ம் தேதி வெளியாக உள்ளது